ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கக்கூடிய அரசு வேலை!! எழுத படிக்க தெரிந்தவர்கள், 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு என்று அனைவருக்கும் வேலை!! 18 காலி பணியிடங்கள் உள்ளது!

Follow Us
Sharing Is Caring:

நீண்ட நாள் கழித்து ராமநாதபுரத்தில் 18 அரசு வேலைவாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்புகள் ராமநாதபுரத்தில் உள்ள முக்கியமான இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளது. மேலும் இந்த 18 வேலைவாய்ப்புகளுக்கும் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், அதாவது டிரைவர் வேலைக்கான ஆட்களும் தேவைப்படுகிறார்கள்.

மேலும் எழுத்தர் வேலைக்கான ஆட்கள், அலுவலக உதவியாளர், இரவு காவலர் என்று பல வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே தற்போது வெளிவந்துள்ள புதிய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.


கவனிக்க: ராமநாதபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் வெளியிடப்பட்ட இந்த டிரைவர், ரெக்கார்டு க்ளெர்க், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் போன்ற பணியிடங்களுக்கு 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முக்கியமாக இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க நிறைய காலம் உள்ளது, அதாவது 06/11/2023 பிற்பகல் 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம், எனவே தவறவிடாமல் இந்த பணிக்கு விண்ணப்பியுங்கள்.

ஆகையால் இந்த அறிவிப்பின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள காலியாக இருக்கும் பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்ய தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகவே தயவு செய்து இந்த அறிவிப்பை பயன்படுத்தி இராமநாதபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகளில் இணைந்து விடுங்கள்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

முக்கியமாக, நீண்ட நாட்கள் காத்திருந்த உங்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் என்று ஒரு குறைந்த கல்வி தகுதியை வைத்திருப்பதற்கான அரசு வேலை வாய்ப்புகள் இது, எனவே ஒவ்வொன்றையும் தெளிவாக, தகுந்த விளக்கங்களோடு இந்த பகுதியில் பார்க்கலாம் வாருங்கள்.


Application for the post of Driver, Record Clerk, Office Assistant and Night Watchman from Rural Development Dept, Ramanathapuram District.

அறிவிப்புmayiladuthurai.nic.in
பதவிடிரைவர், ரெக்கார்டு கிளார்க், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர்
சம்பளம்15,700/- To 62,000/-
காலியிடம்18
பணியிடம்ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில்
தகுதிகள்தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி06/11/2023

முதல் ராமநாதபுரம் அரசு ஈப்பு ஓட்டுனர் (டிரைவர்) வேலைக்கான விவரங்கள்:

ஈப்பு ஓட்டுனருக்கான காலிப்பணியிடங்கள் மொத்தம் ஆறு (6) உள்ளது.

வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை 19,500 மற்றும் 62,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம் தவிர) முன்னுரிமை அற்றவர்க்கு ஒரு (1) பணியிடமும்.
  • பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் (முன்னுரிமை பெற்றவர்) கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு ஒரு (1) காலிப்பணியிடமும்.
  • ஆதிதிராவிடர் முன்னுரிமை அற்றவருக்கு ஒரு (1) காலிபி பணியிடமும்.
  • மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர் சீர்மரபினர், முன்னுரிமை ஆற்றவருக்கு ஒரு (1) காலி பணியிடமும்.
  • பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம் தவிர) முன்னுரிமை அற்றவர் (தமிழ் வழி கல்வி பயின்ற) (பெண்) ஒரு (1) காலி பணியிடமும்.
  • பொதுப்போட்டியில் முன்னுரிமை அற்றவர் (தமிழ் வழி கல்வி பயின்ற) (பெண்) ஒரு (1) காலிப்பணியிடமும் சேர்ந்து மொத்தம் ஆறு காலி பணியிடம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈப்பு ஓட்டுனருக்கான கல்வி தகுதி:

ராமநாதபுரம் ஈப்பு ஓட்டுநருக்கான கல்வி தகுதியை பொருத்தவரை எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அடுத்து செல்ல தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும், மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டுகளுக்கு குறையாமல் மோட்டார் வாகன ஓட்டுவதில் நடைமுறை அனுபவம் பெற்று இருக்க வேண்டும், அதற்கான ஆதாரம் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்ட டிரைவர் வேலைக்கான வயது வரம்பு:

வயது அளவை பொறுத்தவரை பொது பிரிவினருக்கு 18 முதல் 32, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 18 முதல் 34, ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட அருந்ததியர் ஆகியோருக்கு 18 வயது முதல் 42 வயது என்பது குறிப்பிடத்தக்கது.


ராமநாதபுரம் அரசு பதிவறை எழுத்தாளருக்கான விவரங்கள்:

இந்த அரசு பதிவரை எழுத்தர் ஊதியத்தை பொறுத்த வரை ராமநாதபுர அறிவிப்பின் அடிப்படையில் 15,900/- முதல் 50,400/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைக்கு ஒரு காலி பணியிடம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: பத்தாம் (10th) வகுப்பு நிறைவு பெற்ற நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் பொதுப்போட்டி (முன்னுரிமை பெற்றவர்) கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் என்பவர்களுக்கு ஒரு (1) காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வயது: வகுப்பு மற்றும் வயது வாரியாக விவரங்களை பொறுத்தவரை பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 32, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 18 முதல் 34, ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட அருந்ததியர் அவர்களுக்கு 18 முதல் 37 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்ட அரசு இரவு காவலர் காவலர் பணியிட விவரங்கள்:

இந்த இரவு காவலர் எனப்படும் வாட்ச்மேன் வேலைக்கான பணியிடத்தை பொருத்தவரை நான்கு (4) காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு மாத உதயமாக 15,700/- முதல் 50,000/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கல்வி தகுதியை பொருத்தவரை எழுத படிக்க தெரிந்தவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.

  • ஆதிதிராவிடர் (முன்னுரிமை பெற்றவர்) கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்களுக்காக ஒரு (1) பணியிடமும்.
  • மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர் மறுமையினர் (முன்னுரிமை அற்றவர்) பெண், ஆதரவற்ற விதவை என்பவர்களுக்கு ஒரு (1) காலிப்பணியிடமும்.
  • பிற்படுத்தப்பட்டவர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் தவிர) முன்னுரிமை அற்றவர் (பெண், ஆதரவற்ற விதவை) என்பவர்களுக்கு ஒரு (1) காலிப்பனிடமும்.
  • பொதுப்போட்டி முன்னுரிமை அற்றவர்களுக்கு ஒரு (1) காலி பணியிடனும், சேர்த்தே நான்கு (4) காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: வயது வரம்பு மற்றும் வகுப்புவாரியான விளக்கங்களை பார்க்கும்போது பொதுப் பிரிவினருக்கு 18 வயது முதல் 32 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 34 வயதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட அருந்ததியர் ஆகியவர்களுக்கு 18 வயது முதல் 37 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு வேலைக்கு முன்னுரிமை பெற்றவர்கள் என்றால் என்ன?

முன்னுரிமை பெற்றவர் எனில் அரசாணை எண் 122, மனித மேலாண்மை துறை நாள் 12/11/2021-இல் தெரிவித்துள்ள அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படும்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு வேலைகளுக்கான நிபந்தனைகள்:

தற்போது வெளிவந்த இந்த ராமநாதபுரம் வேலைக்கான நிபந்தனைகளை பொருத்தவரை விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, இருப்பிடம் சான்று, முன்னுரிமை சான்று மற்றும் இதர சான்றுகளுடன் ஆதாரங்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.

மேலும் இன சுழற்சி, வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அதோடு ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியம்.

அதோடு விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட (ராமநாதபுரம் ) மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியாக அஞ்சல் மூலமாக அவருக்கு தெரிவிக்கப்படும். மேலும் இந்த அறிவிக்கையை ரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் நியாயமான அலுவலருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பம் பெறப்படக்கூடிய இறுதி நாள்:

அதாவது அலுவலக வேலை நாட்களில் 06/11/2023 பிற்பகல் 5:45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ நீங்கள் அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுப்ப வேண்டிய முகவரி: ராமநாதபுரம் மாவட்ட அரசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மாவட்ட ஆட்சியரகம் வளர்ச்சி பிரிவு, முதலாம் தலம், இராமநாதபுரம் மாவட்டம் – 63 35 04.

குறிப்பு: இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் கீழ் கொடுக்கப்படும் டிரைவர், ரெக்கார்டு க்ளெர்க், அலுவலக உதவியாளர், மற்றும் இரவு காவலர் பணிக்கான விண்ணப்ப படிவத்தை எங்களுடைய JobsTn வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அதிகாரப்பூர்வ வலைதளமான ராமநாதபுரம் (https://ramanathapuram.nic.in/) தாளத்திலும் பதிவிறக்கம் செய்வது கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


Application for the post of Driver, Record Clerk, Office Assistant and Night Watchmen from Rural Development Dept, Ramanathapuram District.
Ramanathapuram District govt jobs

ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்புகள் சம்பந்தமான தெளிவான விளக்கங்களை அதிக நேரம் செலவிட்டு எழுதி இருக்கிறோம், காரணம் இதை படிக்கும் நபர்கள் அனைவருக்கும் எந்த ஒரு சந்தேகமும் இருக்கக் கூடாது, அவர்களுக்கான முழு விளக்கங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசாங்க அறிவிப்பின் மூலம் எடுக்கப்பட்ட விளக்கங்களை தெளிவாக பட்டியலிட்டுள்ளோம்.

கவனிக்க: கூடுதல் சந்தேகங்கள் உங்களுக்கு வந்தாலும் அதையும் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கும் காரணத்தினால் அந்த சந்தேகத்தை கருத்து பெட்டியில் பதிவிடுங்கள், அதற்கான பதிலை உடனே கொடுப்போம்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment