சபரிமலைக்கு புனித பயணத்தை மேற்கொள்ளுங்கள்: சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பு கட்டண ரயில்கள்! நாகர்கோவிலில் இருந்து பன்வெல் வரையிலான தெற்கு ரயில்வேயின் பிரத்யேக சேவை இப்போது பாதையில் உள்ளது.
இது ஒரு சுமூகமான சபரிமலைக்கு யாத்திரை அனுபவத்தை உறுதி செய்கிறது. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் புதன் கிழமையும் புறப்பட்டு, நவம்பர் 28 முதல் ஜனவரி 17 வரையிலான ஆன்மீகப் பயணத்தில் உங்கள் பயணத்தை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் இருக்கையைப் பாதுகாத்து, இன்றே சபரிமலைக்கு தெய்வீகப் பயணத்தைத் பெறுங்கள்! முழு விவரங்கள் கீழே.
அறிவிப்பு: தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதற்காக சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால், நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் பன்வேலுக்கு சிறப்பு கட்டண ரயிலை இயக்க தெற்கு ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
நவம்பர் 28 முதல்
அந்தவகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நாகர்கோவில் சந்திப்பிலிருந்து பன்வேலுக்கு (06075) நவம்பர் 28 முதல் (பன்வேலுக்கு) அடுத்த நாள் இரவு 10:00 மணிக்கு டிசம்பர் 5, 12, 19, 26, மற்றும் ஜனவரி 2, 9, 16 ஆகிய தேதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 11:40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பிலிருந்து புறப்படும். மறுநாள் இரவு 10:20 மணிக்கு பன்வெல் ரயில் நிலையத்தை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் & ஜனவரி
மறுபுறம், நவம்பர் 29, டிசம்பர் 6, 13, 20, 27, ஜனவரி 3, 10, 17 ஆகிய தேதிகளில் அனைத்து புதன்கிழமைகளிலும் பன்வெல் முதல் நாகர்கோவில் சந்திப்பு வரை பன்வெல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தை சென்றடையும். ஆகையால் இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.