தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மற்றும் விற்பனை மேலாளர் பணியிடத்திற்கான அரசு வேலை வெளியிடப்பட்டுள்ளது.
இது வாழ்ந்து காட்டும் திட்டம் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, வட்டாரத்தில் உள்ள TNRTP உடுமலைப்பேட்டை மற்றும் குண்டகம், பொங்கலூர் உழவர் உட்பதியாளர் கூட்டமைப்பிற்கு கொள்முதல் மற்றும் விற்பனை மேலாளர் (Procurement and Sales Manager (PSM) வேலைக்கான அரசு அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த VAAZHNDHU KAATTUVOM PROJECT அறிவிப்பின் அடிப்படையில் உங்களுடைய விண்ணப்ப படிப்பு 18/12/2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையின் பெயரை பொறுத்தவரையில் தமிழில் கொள்முதல் மற்றும் விற்பனையாளர் என்று கூறுவார்கள், ஆங்கிலத்தில் Procurement and Sales Manager (PSM) என்று கூறுவார்கள்.
இந்த வேலைக்கு சம்பளமாக பத்தாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது 8000+2000 என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையானது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உங்களுக்கு கிடைக்கும்
உங்களுக்கு வயது வரம்பு 20 முதல் 45 வயது இடைப்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 20 வயது பூர்த்தி அடைந்து, 45 வயது கடக்காதவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்ச கல்வி தகுதி இருந்தாலே இந்த வேலைக்கு போதுமானது என்று குறிப்பிட பட்டுள்ளது. மேலும் ஒரு வருடம் சம்பந்தப்பட்ட துறையில் உங்களுக்கு முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.
அதே சமயம் விவசாயிகளுடன் உரையாடுதல், விவசாய பற்றிய விஷயங்களை கையாள்வதில் நல்ல தேர்ச்சி உங்களுக்கு தேவைப்படும்.
நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், விண்ணப்பங்களை வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட செயல் அலுவலர், மாவட்டத் திட்ட மேலாண்மை அலகு, அரை எண் 713, 714, ஏழாவது தளம், மாவட்ட ஆட்சியரகம், திருப்பூர் மாவட்டம் 641601 மற்றும் தொலைபேசி எண் 0421-2999723 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
ஆங்கிலம்: Vaazhndhu Kaattuvom Project 7 th Floor, Room No:713,714 Collectorate Office, Tiruppur-641604.
- Contact Number: 7502434743
- Mail: tur.tnrtp@yahoo.com
- https://tiruppur.nic.in/
கவனிக்க: மேலும் தகவலுக்கு பார்க்க அறிவிப்பை பார்க்கலாம், அதற்க்கு இந்த பகுதியை க்ளிக் செய்யுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.